இஸ்ரேல் தூதரகத்தின் அருகில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இளைஞர் கைது
தெஹிவளையில் அமைந்துள்ள இஸ்ரேல் தூதரகத்தின் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மாவனெல்ல – கிரிந்தெனிய பகுதியைச் சேர்ந்த 21 வயதான சந்தேக நபரே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் இஸ்ரேல் தூதரகத்தின் அருகே உள்ள பகுதியில் இருந்ததற்கான திருப்திகரமான விளக்கம் அளிக்கத் தவறியதால் அவரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.