வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பண மோசடி: ஒருவர் கைது

கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி மோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உடுகம்பொல பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்புவதாக கூறி 47 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணத்தை மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்