வீட்டில் மாணிக்கக்கல் அகழ்ந்த நால்வர் கைது

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போற்றி தோட்டத்திலுள்ள கள அதிகாரியின் இல்லத்தில் இரத்தினக்கல் தோண்டிக்கொண்டிருந்த கள அதிகாரி உட்பட நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பலாங்கொடை, பொகவந்தலாவ மற்றும் நோர்வூட் பிரதேசங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

தோட்டத்திலிருந்து காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர் செல்லும் கால்வாய்க்கு அருகில் கள அலுவலரின் உத்தியோகபூர்வ இல்லம் அமைந்துள்ளதுடன், அந்த உத்தியோகபூர்வ இல்லத்தின் படுக்கையறையில் 30 அடி ஆழமான பள்ளம் தோண்டப்பட்டு குழியில் இருந்த வண்டல் மண் எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த இல்லத்தினுள் நீண்ட நாட்களாக மண் அள்ளப்பட்டு இருப்பதாக சந்தேக நபர்களை கைது செய்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்