வாதுவயில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

வாதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொதுப்பிட்டிய பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் நேற்று சனிக்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் 36 வயதுடைய வாதுவ பிரதேசத்தை சேர்ந்தவர் ஆவார்.

வாதுவ பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபரை சுற்றிவளைத்துப் பிடித்து கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரிடமிருந்து 12 கிராம் 250 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் வாதுவ பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்