
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் 50 மில்லிமீற்றர் வரை மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்