வத்தளை பகுதியில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகொலை

கொழும்பு – புறநகர் பகுதியான வத்தளை பகுதியில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் வைத்து இன்று புதன்கிழமை காலை  இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மாத்தறை பகுதியைச் சேர்ந்த சேனபர ஹெட்டியாராச்சி (58 வயது) என்பவரே இதன்போது உயிரிழந்துள்ளார்.

விடுதிக்குள் நுழைந்த மர்ம கும்பல் ஒன்று விடுதியின் ஊழியரான குறித்த நபரை கொலை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

முச்சக்கரவண்டியொன்றில் ஐந்து பேர் கொண்ட மர்ம குழுவினர் தனியார் விடுதிக்கு வந்துள்ளமை

முச்சக்கரவண்டியொன்றில்  தனியார் விடுதிக்கு வந்த 5 பேர் கொண்ட   குழுவினரால் இந்த கொலை சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை பாதுகாப்பு கமராக்களில் பதிவான காட்சிகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது..

மேலதிக விசாரணைகளை வத்தளை மற்றும் களனி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்