
வங்கிகளுக்கு இன்று விடுமுறை
நாடு முழுவதும் இன்று செவ்வாய்க்கிழமை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் இன்று சகல வங்கிகளும் காலை 11 மணி வரை மாத்திரம் திறந்து வைக்கப்படுமென இலங்கை வங்கி சேவை சங்கம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, சகல வங்கிகளும் இன்று காலை 8.30 மணிக்கு திறக்கப்பட்டு இரண்டரை மணிநேரம் சேவை வழங்கப்படும் என அந்தச் சங்கம் மேலும் அறிவித்துள்ளது.
மேலும் நாளை புதன்கிழமையிலிருந்து வங்கி சேவைகள் மீண்டும் வழமை போல் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்