யாழில் நினைவேந்தல் நிகழ்வின் போது கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு விளக்கமறியல்

-யாழ் நிருபர்-

கொடிகாம மாவீரர் தின நிகழ்வில் விடுதலைப் புலிகளின் சின்னத்தை ஒத்த ஆடை அணிந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இளைஞனை இன்று புதன்கிழமை சாவச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாக்கப்பட்ட நிலையில் எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

கடந்த திங்கட்கிழமை 27ஆம் தேதி மாவீரர் தின நாள் அன்று கொடிக்காலத்தில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட ஆடை அணிந்திருந்ததாக இராணுவ புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு கொடிகாமப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இன் நிலையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பொலிஸாரால் சாவச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து குறித்த நபரை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார் .

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்