
முதலையுடன் செல்ஃபி எடுத்த நபருக்கு 50 தையல்
பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள கபோக் மாங்குரோவ் என்ற உயிரியல் பூங்காவில் 29 வயதான சுற்றுலா பயணி சிலை என நினைத்து முதலையுடன் செல்ஃபி எடுக்க முயன்றதில் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து மேரும் தெரியவருகையில்,
பிரபலமடைவதற்காக அபாயகரமான இடங்களில் செல்ஃபி எடுக்கும் நடைமுறை சமீபத்தில் அதிகரித்து உள்ளது.
இந்நிலையில் மாங்குரோவ் உயிரியல் பூங்காவில் சில முதலைகள் வாயை திறந்தவாறு ஓரமாக நின்றது. இதனை அவதானித்த சுற்றுலா பயணி குறித்த முதலைகளை சிலை என நினைத்து அதன் அருகில் சென்று செல்ஃபி எடுத்துள்ளார்.
இதேவேளை குறித்த முதலை சுற்றுலா பயணியை தாக்கிய நிலையில் முதலையிடம் இருந்து தப்ப குறித்த நபர் கடுமையாக போராடியுள்ளார்.
இந்நிலையில் இதனை அவதானித்த ஏனைய சுற்றுலா பயணிகள் கத்தி கூச்சலிட்டனர்.
பின்னர் ஏராளமான பாதுகாவலர்கள் வந்து முதலையிடம் இருந்து அவரை மீட்டனர்.
30 நிமிடங்களாக அவருக்கும் முதலைக்கும் இடையே கடும் போராட்டம் இடம்பெற்றதுடன் கை, கால், முதுகு போன்ற பகுதிகளில் கடுமையான காயங்களுக்குள்ளான குறித்த சுற்றுலா பயணிக்கு 50 தையல்கள் போடப்பட்டதுடன் உயிருக்கு ஆபத்து இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.