
மீட்டியாகொடையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி
காலி – மீட்டியாகொட, தம்பஹிட்டியவில் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிர் இழந்ததுடன் மற்றுமொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
46 வயதுடைய ஒருவரே இதன் போது உயிர் இழந்துள்ளதுடன் 52 வயதுடைய நபர் படுகாயம் அடைந்து பலபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு துப்பாக்கிதாரிகள், ரி – 56 துப்பாக்கியைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து மீட்டியாகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.