
மியன்மாரில் உள்ள சைபர் முகாம்களில் மீட்கப்பட்ட 15 இலங்கையர்கள் நாட்டிற்கு
மியன்மாரில் உள்ள சைபர் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 15 இலங்கையர்கள் மீட்கப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
15 இலங்கையர்களும் தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து நேற்று புதன்கிழமை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
மியன்மார் சைபர் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்களில் 41 பேர் இதுவரை நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்