![மின்னல் தாக்கி விவசாயி உயிரிழப்பு](https://minnal24.com/wp-content/uploads/2023/12/மின்னல்-தாக்கி-விவசாயி-உயிரிழப்பு.jpg)
மின்னல் தாக்கி விவசாயி உயிரிழப்பு
கலேவெல பிரதேசத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது மின்னல் தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தம்புள்ளை புலகல பிரதேசத்தைச் சேர்ந்த எம்.ஏ. சோமதிலாவில் (வயது – 60) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் தனது குடும்பத்துடன் வயலில் விதை விதைத்துக் கொண்டிருந்த போது மின்னல் தாக்கி தூக்கி வீசப்பட்டதையடுத்து உடனடியாக கலேவெல வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்திருந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்