மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் இன்று கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

வடமத்திய மாகாணத்திலும், மாத்தளை, திருகோணமலை, வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்