மன்னாரை சேர்ந்த 7 பேர் தனுஷ்கோடியில் தஞ்சம்

-மன்னார் நிருபர்-

மன்னார் சாந்திபுரம் பகுதியிலிருந்து இரண்டு குடும்பங்களை சேர்ந்த ஏழு பேர் படகு மூலம் நேற்று வெள்ளிக்கிழமை தனுஷ்கோடிக்கு அடுத்துள்ள மூன்றாம் மணல் திட்டில் சென்று தஞ்சம் அடைந்துள்ளனர்.

தகவல் அறிந்த ராமேஸ்வரம் மரைன் பொலிஸார் அவர்களை மீட்டு முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைத்தனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தாங்கள் இரண்டு குடும்பங்களும் ஒரு இலட்சம் ரூபாய் வழங்கி படகு மூலம் தனுஷ்கோடிக்கு வருகை தந்ததாக தெரிவித்துள்ளனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக இன்று வரை 295 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடி வந்து மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மன்னாரை சேர்ந்த 7 பேர் தனுஷ்கோடியில் தஞ்சம்

மன்னாரை சேர்ந்த 7 பேர் தனுஷ்கோடியில் தஞ்சம்

மன்னாரை சேர்ந்த 7 பேர் தனுஷ்கோடியில் தஞ்சம்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்