
மனைவியின் இறுதிச் சடங்கிற்கு பணம் இல்லை : கணவர் எடுத்த முடிவு!
மனைவியின் சடலத்தை இரகசியமாக வீட்டின் பின்புறத்தில் புதைத்த கணவர் மதவாச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விஜயபுர-பண்டுகாபய புர பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இறந்து போன மனைவியின் இறுதிச் சடங்கிற்கு பணம் இல்லாத காரணத்தினால் குறித்த நபர் மனைவியின் சடலத்தை இவ்வாறு வீட்டின் பின்புறம் புதைத்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எனினும் இவ்வாறு செய்வது சட்டத்துக்கு முரணான செயல் என்பதால் குறித்த நபரை கைது செய்துள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த பெண் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை தனது தாயாரை சென்று பார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்தார் எனவும், எனினும் கடந்த சில நாட்களாக அவர் தனது தாயாரை பார்க்க வரவில்லை எனவும் அவரது உறவினர் ஒருவர் மதவாச்சி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின்போதே இவ்விடயம் தெரிய வந்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்