மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து 14 கைதிகள் விடுதலை

-மட்டக்களப்பு நிருபர்-

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 14 ஆண் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் நல்லையா பிரபாகரன் தலைமையில் இடம்பெற்ற கைதிகள் விடுதலை செய்யப்படும் நிகழ்வில்,  பிரதம ஜெயிலர் உள்ளிட்ட சிறைச்சாலையின் உத்தியோகத்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

சிறு குற்றம் புரிந்த, தண்டனைப் பணம் செலுத்தாத கைதிகளே இன்றைய தினம் இவ்வாறு இலங்கை பூராகவும் உள்ள சிறைகளில் இருற்கு 988 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்