
மட்டக்களப்பு ஆரையம்பதியில் விபத்து
மட்டக்களப்பு ஆரையம்பதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் வாகனங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் ஊடாக பயணித்த கார் ஆரையம்பதி பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த 3 மோட்டார்சைக்கிள் மீது மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தின் காரணமாக 3 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் காருக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்