மட்டக்களப்பில் வாழ்வாதார நிகழ்ச்சித் திட்டம்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

தொழில் வாய்ப்பின்றி இருக்கும் இளைஞர்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான வாழ்வாதார நிகழ்ச்சித் திட்ட நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் ஜுலேகா ஜஸ்டினா தலைமையில் மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகத்தினால் மாவட்ட செயலகத்தின் ஒழுங்குபடுத்தலின் கீழ் இந்நிகழ்வு இடம்பெற்றது.

சூரிய மின்கல படலம் (Solar Panel) நிறுவுதல் மற்றும் பாரமரித்தல் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டன.

மேலும், இப் பயிற்சி நெறியில் திறமையை வெளிக்காட்டுபவர்களுக்கு என்விகியூ தர சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.

மேலும், நாட்டில் அதிகளவான சூரிய மின் தகடுகள் நிறுவப்பட்டு வருவதனால் அதனை பராமரித்தல் மற்றும் பிந்திய சேவைகளை வழங்குவதற்கான பணியாட்களுக்கான தேவை அதிகரித்துள்ளதனால் இத்திட்டம் அமுலாக்கப்படுகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்