பொதுமக்கள் பணிக்கு திரும்ப விசேட ரயில் மற்றும் பேருந்துகள்

பொதுமக்கள் பணிக்கு திரும்ப விசேட ரயில் மற்றும் பேருந்துகள்

புத்தாண்டை முன்னிட்டு, தமது சொந்த ஊர்களுக்கு சென்ற பொதுமக்கள், மீண்டும் கொழும்புக்கு திரும்புவதற்காக இன்று சனிக்கிழமை முதல் சில விசேட ரயில்கள் மற்றும் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 17 ஆம் திகதி வரை குறித்த விசேட ரயில் சேவைகள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ரயில் திணைக்களத்தின் பிரதி போக்குவரத்து அதிகாரி என்.ஜே. இந்திபொலகே தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொழும்பிலிருந்து வெளி பிரதேசங்களுக்கு செல்வதற்காகவும் மீண்டும் கொழும்புக்கு திரும்புவதற்காக, இன்று முதல் விசேட பேருந்துகளும் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக, இலங்கை போக்குவரத்து சபையின் போக்குவரத்து திணைக்கள பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹங்ச தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்