பூமியை இன்று கடக்கும் மிக பெரிய விண்கல்

இன்று புதன் கிழமை பூமியை பாரியளவிலான விண்கல் ஒன்று கடக்கவுள்ளதாக  நாசா தெரிவித்துள்ளது.

 

ஈபிள் டவர் அளவு உயரமுள்ள 2006 HV5 என்ற விண்கல்லே இவ்வாறு பூமியை கடக்கவுள்ளது.

1007 அடி உயரமுள்ள இந்த விண்கல் பூமியை 10 லட்சம் கிலோமீற்றர் தொலைவில் மணிக்கு 62,723 கிலோமீற்றர் வேகத்தில் கடந்து செல்லும் என தகவல்கள் வெளியிட்டுள்ளது நாசா.

மேலும், இந்த விண்கற்களால் பூமிக்கு எந்த ஆபத்து இல்லை என்றும், எனினும் விண்கற்களின் அசைவுகள் கவனிக்கப்பட்டு வருவதாகவும் நாசா தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்