தேசபந்து தென்னகோன் நாடாளுமன்ற விசாரணைக் குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளார்

பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை நாடாளுமன்ற விசாரணைக் குழுவின் முன் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த அழைப்பானது மே 19 ஆம் திகதி நாடாளுமன்ற விசாரணைக் குழுவின் முன் ஆஜராகுமாறு முன்னாள் தேசபந்து தென்னகோனுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தேசபந்து தென்னகோனின் கடுமையான அதிகார துஷ்பிரயோகம் குறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட ‘விசாரணைக் குழு’ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்தக் குழு இதுவரை பல முறை நாடாளுமன்ற வளாகத்தில் கூடியுள்ளதுஇ ஆனால் இடைநீக்கம் செய்யப்பட்ட காவல்துறைத் தலைவர் தென்னக்கோன் நாடாளுமன்றக் குழுவின் முன் அழைக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்