Last updated on April 28th, 2023 at 05:12 pm

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த 2 மாதங்களுக்குள் வெளியிடப்படும் | Minnal 24 News %

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த 2 மாதங்களுக்குள் வெளியிடப்படும்

அண்மையில் நடத்தப்பட்ட 2022 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் வெளியிடப்படும் என, பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்தார்.

பரீட்சை பெறுபேறுகளை உரிய நேரத்தில் மதிப்பீடு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.

நாடு முழுவதும் 2,894 பரீட்சை நிலையங்களில் இரண்டு அமர்வுகளாக கடந்த 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட பரீட்சையில் 334,698 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க