
தங்க சுரங்கத்தில் 13 சடலங்கள் மீட்பு
பெரு தலைநகர் லிமாவில் உள்ள தங்கச் சுரங்கத்தில் இருந்து 13 தொழிலாளர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சுரங்கத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்த குற்றக்கும்பலால் இந்த தொழிலாளர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த குற்றக்கும்பலை சேர்ந்தவர்கள் கடத்தப்பட்டவர்களை பணயக்கைதிகளாக பிடித்து வைத்திருந்ததுடன், அவர்களது குடும்பத்தினரையும் அச்சுறுத்தியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்