
செம்பியன்பற்று சென் பிலிப்நேரியார் ஆலய பொதுக்கூட்டத்தில் கைகலப்பு: யுவதி காயம்
வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று சென் பிலிப்நேரியார் ஆலய பொதுக் கூட்டத்தில் இன்று வியாழக்கிழமை கைகலப்பு ஏற்பட்ட நிலையில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பங்குத்தந்தை ஆதர் ஜஸ்ரின் தலைமையில் இன்று காலை 09 மணியளவில் ஆலய வளாகத்தில் ஆரம்பமான பொதுக் கூட்டத்தின் போது பெண் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென் பிலிப்நேரியார் ஆலயத்தில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத ஆலயம் சார்ந்த மக்களின் பிரச்சனைகள் முறுகல் நிலையை தோற்றுவித்து வருவதால் சம்மந்தப்பட்ட யுவதியால் யாழ்மாவட்ட குருமுதல்வருக்கு விடயம் தெரிவிக்கப்பட்டது.
அடுத்த பொதுக் கூட்டத்தில் சமரச முடிவுகளை எடுக்குமாறு முதல்வரால் அறிவுறுத்தப்பட்ட நிலையில் இன்றைய பொதுக் கூட்டத்தில் யுவதி மீது நபர் ஒருவரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதல் சம்பவத்தை எதிர்கொண்ட யுவதியின் உடலில் காயங்கள் ஏற்படுத்தப்பட்டதுடன் யுவதி அணிந்திருந்த தங்க நகைகளும் அறுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக பங்குத்தந்தை ஆதர் ஜஸ்ரினை பிரதேச ஊடகவியலாளர் வினவிய வேளை ஆலயம் சார்ந்த பிரச்சனைகளை தாம் பார்த்துக் கொள்வதாக தெரிவித்தார்.
செம்பியன்பற்று பிலிப்நேரியார் ஆலயத்தில் அண்மை நாட்களாக முறுகல் நிலை ஏற்பட்டுவருவதால் யாழ் மறைமாவட்ட குருமுதல்வரை நேரடியாக தலையிடுமாறு மக்கள் கேட்டுக் கொண்டதுடன் யுவதி மீது தாக்குதலை மேற்கொண்ட நபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் அப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்