கிண்ணியா நகர சபைக்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் ஒரே கட்சியில் தெரிவு

-கிண்ணியா நிருபர்-

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சகோதரர்கள் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டியுள்ளார்கள்.

கிண்ணியா நகர சபைக்கான உள்ளூராட்சி மன்ற தேர்தலில் றஹ்மானியா வட்டாரத்தில் எம்.எம்.மஹ்தி மற்றும் மாஞ்சோலை வட்டாரத்தில் ரசாட் முஹம்மட் ஆகியோர்களுமே வெற்றி பெற்றுள்ளனர்.

குறித்த இருவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்களாவர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்