கழிவறையில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 12 வயது சிறுவன்!

சிறுமியை பாடசாலை கழிவறையில் வைத்து சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் மகாராஷ்டிராவில் நிகழ்ந்துள்ளது.

இந்தியா –  மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே மாவல் என்ற பகுதியில் அரச பாடசாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த பாடசாலையில் கடந்த மாதம் ஒரு அதிர்ச்சிக்குரிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. அன்றைய தினம் வழக்கம்போல் பாடசாலைக்கு வந்த சிறுமியை (வயது 7) அங்கு படிக்கும் சிறுவன் (வயது 12) ஒருவன் கழிவறையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

பாதிப்புக்கு ஆளான சிறுமி வீட்டிற்கு வந்ததும் அழுதுகொண்டே தனது தாயிடம் தனக்கு நேர்ந்த அவலத்தை கூறியுள்ளார். இதையடுத்து அதிர்ச்சி அடைந்த தாயார் பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு அளித்தார். அதன்பேரில் நடவடிக்கை எடுத்த பொலிஸார் சிறுமியை குழந்தைகள் நல ஆணையத்திடம் முன்னிலைப்படுத்தியது.

மேலும்இ சம்பவம் தொடர்பாக போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த பொலிசார், சிறுவனை சிறார் நீதி ஆணையம் விசாரணைக்கு அனுப்பி வைத்துள்ளது. சிறுவன் பாடசாலையில் அரங்கேற்றிய குற்றச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்