இளையோர்களின் பங்களிப்பின்றி கலாச்சார அபிவிருத்தி எதுவும் நடக்காது: அஜானி

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்-

இளையோர்களின் பங்களிப்பின்றிசமூக, பொருளாதார, கலாச்சார அபிவிருத்தி என்று எதுவுமே நடக்காது என சேர்க்கிள் இளம் பெண்கள் அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் அஜானிகாசிநாதர் தெரிவித்தார்.

“இயற்கையைப்பாதுகாப்பதில் இளையோர் ஒன்றிணைவோம்”எனும் செயல்பாட்டுத்தொனியில் அமைந்தசெயலமர்வில் அவர் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

இயற்கையைப் பாதுகாப்பதன் நிமித்தம் சுற்றுச் சூழலைப்பற்றிய அறிவையும் விழிப்புணர்வையும் இளையோருக்குத்தெளிவூட்டும் செயலமர்வும் நடைமுறைத் திட்டங்களும் மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ மண்டபத்தில் இன்று ஞாயிற்று கிழமை ஆரமபித்து வைக்கப்பட்டது.

அதில் இளையோர் அணியாகச் செயற்படும் தமிழ் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த30 இளைஞர் யுவதிகள் செயல்பாட்டு செயலமர்வில் பங்கு பற்றினர்.அங்கு செயலமர்வில் தொடர்ந்து உரையாற்றிய நிறைவேற்றுப் பணிப்பாளர் அஜானி, சுற்றுச் சூழலைப்பற்றிய தெளிவானபுரிதலையும் அறிவையும் பெற்று சமகால உலகின் போக்கைமாற்றுவதன் மூலம்தான் எதிர்கால உலகத்தைப்பாதுகாத்துக் கொள்ளமுடியும்.

மக்கள் தொகைப்பெருக்கம் அதற்கீடாக இடம்பெறும் அபிவிருத்திகளால் எம்மைச் சுற்றியுள்ள சூழல் தொகுதி பெரும் பாதிப்பைஅடைந்துள்ளது. பல்லுயிர்த்தன்மை சவால்களை எதிர்கொண்டுள்ளது.மனிதர்கள் மட்டுமல்ல இந்த உலகின் பிறஉயிர்களும் செடிகொடி மரங்களும் வாழ இயலாத இடமாக இந்தஉலகம் மாறிக்கொண்டிருக்கின்றது. இந்தப் பாதிப்பை நிவர்த்தி செய்யாமல் மனிதர்கள் பலதசாப்தங்களாகத் தவறிழைத்திருக்கிறோம். அதன் பின்விளைவுகளைதற்போது உலகம் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு காலநிலைமாற்றம் சிறந்ததொரு உதாரணமாகும்.

இப்படிமனிதர்கள் இயற்கைக்குச் செய்கின்ற தீங்குகள்தொடர்ந்தால் மனிதகுலத்தில் தோன்றப்போகும் எதிர்கால சந்ததிகள் இப்பூமிப் பந்தில் வாழமுடியாது போகலாம்.

ஆயினும் மனிதர்களே மனிதவாழ்வியலுக்கும் மற்றஉயிரினங்களின் வாழ்வையும் அழிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர். இனிமேலும் இது தொடர அனுமதிக்கக் கூடாது.குறிப்பாக நிலம், நீர், வளி என்பனவற்றை தற்போது இருக்கும் நிலையிலாவது அவற்றைத் தக்க வைத்து கொள்ளப் பாடுபடவேண்டும்.

சனத்தொகைப் பெருக்கத்துக்கேற்ப இயற்கை வளங்களை நாசப்படுத்தாமல் பயன்படுத்தவேண்டும். இளையோர்கள் சமகாலத்தில்உலகம் எதிர்நோக்குகின்ற சவால்களான இயற்கை சக்தி மூலங்களின் பற்றாகுறை, உணவு, சூழல்சார்பான புரிதலைகொண்டிருப்பதுடன், மாற்றுசக்தி வழிமுறைக்கானதெளிவை பெற்றிருத்தல் என்பதும் காலத்தின்தேவையாகும். இயற்கையோடு இணைந்து வாழ்ந்தால் ஒரு போதும் கேடுநெருங்காது”என்றார்.

செயலமர்வின் நிறைவில்  இயற்கையைப் பேணும்வகையில் களுவன்கேணி, மகிழவெட்டுவான், ஓட்டமாவடி ஆகிய பிரதேசங்களில் உள்ள பொது இடங்களில் பயன்தரும் மரங்கள் செயற்பாட்டு இளைஞர்அணியினரால் நாட்டிவைக்கப்பட்டன. இந்நிகழ்வுகளில் வளவாளராகவிவசாய அமைச்சின் விவசாய நவீனமயமாக்கல் திட்டப் பிரிவின் அதிகாரி ஆர்.பேரரங்கன் வளவாளராகக்கலந்து கொண்டதுடன்,  சேர்க்கிள் இளம் பெண்கள் அமைப்பின் வெளிக்கள இணைப்பாளர் வி.அனுஷியா உட்பட இளையோர் அணியின்செயற்பாட்டாளர்களான தமிழ்முஸ்லிம் இளைஞர்யுவதிகள் 30 பேர்பங்குபற்றினர்.

இளையோர்களின் பங்களிப்பின்றி கலாச்சார அபிவிருத்தி எதுவும் நடக்காது அஜானி

இளையோர்களின் பங்களிப்பின்றி கலாச்சார அபிவிருத்தி எதுவும் நடக்காது அஜானி

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்