![ஆணுறைகளின் சீரற்ற பயன்பாட்டினால் அதிகரிக்கும் HIV தொற்று](https://minnal24.com/wp-content/uploads/2023/06/ஆணுறைகளின்-சீரற்ற-பயன்பாட்டினால்-அதிகரிக்கும்-HIV-தொற்று.jpg)
ஆணுறைகளின் சீரற்ற பயன்பாட்டினால் அதிகரிக்கும் எயிட்ஸ் தொற்று
நாட்டில் கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது இந்த வருடம் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுள்ளதுடன் ஆணுறைகளின் சீரற்ற பயன்பாடு இதற்கு பிரதான காரணம் என தேசிய சுகாதார சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு பதிவான மொத்த தொற்றுக்களுடன் ஒப்பிடும்போது, இந்த வருட முதல் காலாண்டில் 13 சதவீத அதிகரிப்பு பதிவாகியுள்ளது.இதன்படி ஒரு வருடத்திற்குள் 620 புதிய நோயாளிகள் மற்றும் 81 இறப்புகள் பதிவாகியுள்ளJ.
அத்துடன் எயிட்ஸ் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 4,556 இலிருந்து 5,176 ஆக அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டின் முதல் காலாண்டில், 165 புதிய நோயாளிகள் மற்றும் 15 இறப்புகள் பதிவாகியுள்ளன. எனினும் 2022 ஆம் ஆண்டுவரை மொத்தம் 1,520 எயிட்ஸ் தொடர்பான இறப்புகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்