![அதிகளவு மாத்திரைகளை உட்கொண்ட சிறுமி உயிரிழப்பு](https://minnal24.com/wp-content/uploads/2023/04/அதிகளவு-மாத்திரைகளை-உட்கொண்ட-சிறுமி-உயிரிழப்பு.jpg)
அதிகளவு மாத்திரைகளை உட்கொண்ட சிறுமி உயிரிழப்பு
உடஹெந்தென்ன பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் அதிகளவு பரசிட்டமோல் மாத்திரையை உட்கொண்டதன் விளைவாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடுவெல்ல தாமரவல்லி கொலனியில் இரண்டாம் தரத்தில் கல்வி பயிலும் (வயது – 7) சிறுமி காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்துள்ளார்.
குறித்த சிறுமிக்கு கம்பளை குருந்துவத்தை வைத்தியசாலையில் இரண்டு தடவைகள் மருந்து எடுத்துள்ளனர்.
சிறுமிக்கு வைத்தியரால் பரிந்துரைக்கப்பட்ட மருந்தளவிற்குப் பதிலாக வைத்தியசாலையின் மருந்தகத்தினால் பரிந்துரைக்கப்பட்ட வயது வந்தோருக்கான டோஸ் வழங்கப்பட்டதால்இ சிறுமிக்கு அதிக டோஸ் கிடைத்ததையடுத்து அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்