லிட்டில் பட் பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு நிகழ்வு

-மட்டக்களப்பு நிருபர்-

லிட்டில் பட் பாலர் பாடசாலையின் (Little Buds Montessori School) வருடாந்த விளையாட்டு நிகழ்வானது பாலர் பாடசாலை அதிபர் திருமதி எம்.மிதுலா தலைமையில் செபஸ்டியார் ஆலய வளாகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம் பெற்றது.

இந் நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி மாவட்டச் செயலாளர் ஜீ. பிரணவன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

தேசிய கீதம் இசைத்து ஒலிம்பிக் சுடர் ஏற்றி நிகழ்வுகள் ஆரம்பமாகியது.

2025ம் ஆண்டு பாடசாலை செல்லவுள்ள சிறார்களினால் அதிதிகள் மாலை அணிவித்து பாண்டு வாத்தியம் முழங்க வரவேற்கப்பட்டனர்.

பாலர் பாடசாலை மாணவ மாணவியரின் கண்கவர் நடனங்கள் மற்றும் விநோத உடைப்போட்டி கலை நிகழ்வுகள் இதன் போது அரங்கேறின.

இந் நிகழ்வில் லிட்டில் பட் பாலர் பாடசாலையின் பணிப்பாளர் எஸ். முகாந்தன், வாகரை நிர்வாக உத்தியோகத்தர் வி.சிவராஜன் எனப் பலர் கலந்து கொண்டனர்.