மட்டக்களப்பு குருக்கள்மடம் ஐயப்பன் சன்னிதானத்தில் மகரஜோதி பெருவிழா!

மட்டக்களப்பு குருக்கள்மடம் ஐயப்பன் சன்னிதானத்தில் மகரஜோதி பெருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

அதிகாலை 5.45 மணிக்கு விசேட மகரஜோதிகிரியை வழிபாடுகளுடன் ஆரம்பமாகி, ஐயப்பனுக்கு விசேட அபிசேகம் இடம்பெற்று, பக்தி பூர்வமான பஜனை நிகழ்வு இடம்பெற்றது.

18 படிப்பூசை இடம்பெற்றமையையும் குறிப்பிடத்தக்கது.

திரு ஆபரணம் எடுத்து வரும் நிகழ்வு குருக்கள்மடம் செல்லக்கதிர்காம சுவாமி ஆலயத்திலிருந்து , குருக்கள் மடம் ஐயப்பன் சன்னிதானம் நடைபவனியாக எடுத்து வரும் நிகழ்வு இடம்பெற்றதை தொடர்ந்து , வன்புலி வாகனத்தில்,எழுந்தருளிய ஐயப்பனுக்கு பக்தி பூர்வமான மகரஜோதி பெருவிழா நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

கலியுக வரதன் ஶ்ரீ ஐயப்பனின் கிரியை பூஜை நிகழ்வுகள் யாவும் தர்மசாஸ்தா புனித மாலை குழு குருசாமி ஜெசிந்திரா குரு தலைமையில், விஸ்வ பிரம்மஸ்ரீ செ.சுபேஸ்வரன் குருசுவாமி ஐயா ,ஆலய பிரதம செ. சிவகரன் குழுவினரால் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.