சகோதரியுடன் உடலுறவு: மதகுருவின் கொடூர செயல்
இந்தியாவில் கர்நாடகா மாநிலத்தில் சிறுமி ஒருவர் மதகுருவால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
சித்ரதுர்கா பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமியே இவ்வாறு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இது பற்றி தெரிய வருகையில்,
மதகுருவிடம் குறித்த சிறுமி கடந்த மூன்று ஆண்டுகளாக குர்ஹான் படித்து வந்துள்ளார். சம்பவத்தன்றுஇ அந்த சிறுமியின் வீட்டிற்கு மதகுரு வந்துள்ளார். அப்போது அந்த சிறுமிக்கு பிசாசு பிடித்துள்ளது. அதை தான் விரட்டியடிக்கிறேன் எனச் சொல்லியுள்ளார்.
இது தொடர்பாக அவர் சகோதரரிடம், உன் தங்கைக்கு பிசாசு பிடித்துள்ளது. இதனால் அவளுடன் உடலுறவு வைத்தால் சரியாகிவிடும் எனக் கூறினார். இது தொடர்பாக சகோதரரை வற்புறுத்தி, உடலுறவுக்கு தூண்டியுள்ளார். மேலும், தங்கைக்கு சகோதரர் கொடுத்த பாலியல் துன்புறுத்தலை படம் எடுத்துள்ளார். அந்த படத்தை காட்டி அந்த சிறுமியை அவரும் பலாத்காரம் செய்துள்ளார்.
வாரத்திற்கு ஒருமுறை என இந்த கொடுமை ஆறு முதல் ஏழு மாதங்கள் நடந்துள்ளது. குறித்த சிறுமி வயிறு வலிப்பதாக அவருடைய அம்மாவிடம் தெரிவித்தார். சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது தான் இந்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தனது மகளுக்கு நடந்த கொடூர சம்பவம் குறித்து மகளிர் பொலிஸ் நிலையத்தில் சிறுமியின் தாயார் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிசார் குற்றவாளிகளுக்க எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.
மேலும்இ மதகுரு மற்றும் சகோதரர் ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் பொலிசார் கைது செய்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்