கொள்ளுபிட்டி விபத்து : கார் சாரதிக்கு பிணை

கடந்த வாரம் கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற கோர விபத்தில், விபத்தை ஏற்படுத்திய கார் சாரதிக்கு பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த விபத்தில் உயிரிழந்த முச்சக்கரவண்டி சாரதியின் குடும்பத்திற்கு, சந்தேக நபரான கார் சாரதி 1.5 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்தில் படுகாயமடைந்த 3 பிள்ளைகளின் தந்தையான முச்சக்கரவண்டி சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.