புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் ஆம்புலன்ஸ் பற்றாக்குறை

கிழக்கு மாகாண இலக்கிய விழா 2025 விருதுப்பட்டியல் அறிவிப்பு

-யாழ் நிருபர்-

புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் ஆம்புலன்ஸ் பற்றாக்குறையால் பல பிரச்சனைகள் தொடர்ந்து காணப்பட்டு வருவதோடு நோயாளிகள் பல சவால்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

பாடசாலை மாணவி ஒருவர் இன்று புதன் கிழமை பாடசாலை தலை வலி, வாந்தி மற்றும் மயக்கம் போன்ற நோய் காரணமாக வைத்தியசாலையில்  அனுமதித்த போது மேலதிக சிகிச்சைக்காக மாஞ்சோலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முடியாமல் வைத்தியசாலை நிர்வாகம் பல சவால்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

உடையார் கட்டு மத்திய கல்லூரிக்கு கல்வி கற்க இன்று காலை  சென்ற குறித்த மாணவி உடல்நலக் குறைவால் பாடசாலையில் இருந்து காலை பெற்றோரிடம் பாடசாலை நிர்வாகத்தினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

ஒப்படைக்கப்பட்ட மாணவியுடன் பெற்றோர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர். புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக பாடசாலை மாணவி மாஞ்சோலை வைத்தியசாலைக்கு அனுமதிக்க வேண்டிய தேவை காணப்பட்டதுடன் மாஞ்சோலை வைத்தியசாலைக்கு புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் இருந்து கொண்டு செல்வதற்கு ஆம்புலன்ஸ்  தேவைப்பட்டதன் காரணத்தால் மாணவியும் பெற்றோரும் காத்திருந்துள்ளனர்.

3மணிநேரத்தின் பின் மாணவியும் தந்தையும் வைத்தியசாலை வைத்தியரிடம் சென்று தாம் காத்திருப்பதற்கான காரணத்தை கேட்ட போது வைத்தியர் வைத்தியசாலையில் ஆம்புலன்ஸ் பற்றாக்குறை காணப்படுவதாகவும் அதற்கு அவர் தன் சொந்த செலவில் ஆம்புலன்ஸ் விட வேண்டும் என மாணவியும் தந்தையிடம் முரண்பாடாக பேசியுள்ளார்.

இதன் பின் மாணவியும் தந்தை தனது சொந்த விருப்பின் பெயரில் வைத்தியசாலையில் இருந்து மாணவியை மாஞ்சோலை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளாதாக மாணவியின் தந்தை தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும் – Batticaloa News