வெள்ள நீரில் விளையாடிய 4 பேர்: ஒருவர் மாயம்

வெள்ள நீரில் விளையாடிக் கொண்டிருந்த 4 பேர் நீரோட்டத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

அவர்களில் மூவர் அப்பகுதி மக்களால் மீட்கப்பட்டதாகவும் ஒருவர் காணாமல் போனதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நிவிவெடல் தோட்டம், நேபட பகுதியை சேர்ந்த 17 வயதுடைய இளைஞனே காணாமல் போயுள்ளார்.

எங்குருவாதொட, உடுவர கரந்தவதுகொட பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது.

காணாமல் போன இளைஞனை கண்டுபிடிக்க பிரதேசவாசிகளும் எங்குருவாதொட பொலிஸாரும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்