15 கோடியே எழுபது இலட்சம் ரூபா பெறுமதியான தங்கத்துடன் ஒருவர் கைது

டுபாயில் இருந்து 60 தங்க பாலங்களை கடத்திவந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற முற்பட்ட போது, கைது செய்யப்பட்டுள்ளார்.

தீர்வையற்ற வர்த்தக நிலையமொன்றில் ஊழியரான குறித்த சந்தேக நபர், தலா 10 தங்க பாலங்கள் அடங்கிய 6 பொதிகளை கொண்டுவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

ஒவ்வொன்றும் தலா 116.62 கிராம் எடையுள்ள 24 கரட் தங்க பாலங்கள் அனைத்தும் 15 கோடியே எழுபது இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதாக சுங்க பிரிவினர் தெரிவித்துள்ளனர்.