சென்னையிலிருந்து இலங்கை வந்த விமானம் மற்றும் அதில் வந்த பயணிகள் விசேட சோதனைக்குட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலையடுத்தே இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.