அவிசாவளையில் விபத்து: 28 பேர் வைத்தியசாலையில் – மூவர் கவலைக்கிடம்

6

கொழும்பு – அவிசாவளை பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை இரண்டு தனியார் பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 28 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெவ்ரும்பிட்டிய வளைவுக்கு அருகில் கொழும்பில் இருந்து எம்பிலிப்பிட்டிய சூரியவெவ நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் இரத்தினபுரியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் அவிசாவளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Sureshkumar
Srinath