ரயில் கட்டண உயர்வுக்கு புறம்பாக செயற்படுவோருக்கு எதிராக நடவடிக்கை

இன்று சனிக்கிழமை முதல்  ரயில் கட்டண உயர்வு அமுலாகின்ற நிலையில், அதற்கு எதிராக செயற்படும் உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சில பிரச்சினைகள் காரணமாக, ரயில் கட்டண திருத்தத்தை அமுலாக்க முடியாது என்றும், ரயில் கட்டண அதிகரிப்பை எதிர்வரும் முதலாம் திகதி தொடக்கம் அமுலாக்க தயார் என்றும், ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.

எனவே, இன்று முதல் குறித்த காலப்பகுதி வரையில் பழைய கட்டணத்தின் அடிப்படையில் ரயில் பயணச் சீட்டுக்களை விநியோகிக்குமாறு தமது சங்கத்தின் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்திருந்தார்

இந்த நிலையில், ரயில் கட்டண உயர்வு முறைமைக்கு புறம்பாக செயற்படும் உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல்24 Whatsapp Mobile +94755155979 OFFICE +94652227172