யாழ். வண்ணை வெங்கடேச வரதராஜப் பெருமாள் ஆலயத்தின் வெண்ணைத்தாழி சேவை திருவிழா!

9
-யாழ் நிருபர்-
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ் வண்ணை ஸ்ரீ வெங்கடேச வரதராஜப் பெருமாள் தேவஸ்தான மஹோற்சவத்தின்  ஏழாம் நாள் திருவிழாவான வெண்ணைத்தாழி சேவை திருவிழா   புதன்கிழமை  பக்திபூர்வமாக இடம்பெற்றது.
கருவறையில் வீற்றிருக்கும் ஸ்ரீ வெங்கடேச வரதராஜப் பெருமாள் சீதேவி, பூமாதேவிக்கு விஷேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றன.
அதனைத் தொடர்ந்து வசந்த மண்டபத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ வெங்கடேச வரதராஜப்பெருமாள் அலங்கார மனைப் பீடத்தில் எழுந்தருளியாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இவ் மஹோற்சவத்தினை ஆலய பிரதம குரு செ.ரமணீதரக் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடாத்தி வைத்தனர்.
இதில் வானவேடிக்கையுடான நிகழ்வும் இடம்பெற்றது, பல இடங்களில் வருகைதந்த பக்தர்கள் கலந்துகொண்டு இஷ்ட சித்திகளை பெற்றுச்சென்றனர்.
Sureshkumar
Srinath