மனைவிக்கு கணவனால் நேர்ந்த கதி: கணவன் எடுத்த விபரீத முடிவு

பூகொட மண்டாவல பிரதேசத்தில் குடும்ப தகராறு காரணமாக கணவன் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்ததோடு தானும் தற்கொலை செய்துகொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மண்டாவல பகுதியைச் சேர்ந்த 46 மற்றும் 54 வயதுடைய மனைவி, கணவன் என்போரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

மனைவியை கொலை செய்த சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகளின் போது சந்தேகநபரின் சடலம் வீட்டிற்கு அருகில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்