புகையிரதம் மோதி ஒருவர் உயிரிழப்பு

-யாழ் நிருபர்-

யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோதி பளை பகுதியில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழில் இருந்து காலை 6.30 மணியளவில் கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் 07.30 மணியளவில் பளை பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.