திருமலையில் கஞ்சாவுடன் ஒருவர் கைது

திருகோணமலை – சமுதுகம பகுதியில் கஞ்சாவுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நடத்தப்பட்ட சோதனையின்போது 41 வயதான குறித்த சந்தேகநபர் 150 கிராம் கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.