சிறுமியை சுட்டுவிட்டு பணத்தை கொள்ளையடித்த கொள்ளையர்கள்

மீகொட பொருளாதார மத்திய நிலையத்திற்குள் இன்று திங்கட்கிழமை காலை அத்துமீறி ஆயுதங்களுடன் நுழைந்த இருவர் கடையை கொள்ளையிட்டு காசாளராக இருந்த சிறுமியை சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

குறித்த கொள்ளையர்கள் கடையின் அலமாரியில் இருந்த பணத்தை கொள்ளையடித்த பின்பு கீழே இருந்த பெட்டகத்தில் உள்ள பணத்தை பெற சாவியை கேட்டு குறித்த சிறுமியின் வயிற்றுப் பகுதியை நோக்கி 3 முறை சுட்டுள்ளனர்.

இதன்போது சிறுமி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

பின்னர் கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிவிட்டதாகவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.