காட்டில் கண்டுபிடிக்கப்பட்ட 2 கஞ்சா தோட்டங்கள்

-பதுளை நிருபர்-

பதுளை – கொஸ்லாந்தை மாலந்த பகுதியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற சுற்றிவளைப்பின் போது கஞ்சா செடிகள் மீட்கப்பட்டுள்ளதுடன் அவை தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.

கரப்பிஞ்சா, கொம்ப கும்புரான் காட்டு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இரண்டு கஞ்சா தோட்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் இதன்போது ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டு இருந்த 6.5 அடி உயரமான கஞ்சா செடிகள் 72870, அரை ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டு இருந்த 2 அடி உயரமான  25410  கஞ்சா செடிகளை கைப்பற்றிய பொலிஸார் தீயிட்டு எரித்துள்ளனர்.

மேலும் குறித்த பகுதியில் சந்தேக நபர்கள் இருக்கவில்லை என்பதுடன் சம்பவம் தொடர்பில் கொஸ்லாந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையில் பொலிஸ் குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.