கடற்படை முகாமிற்குள் கத்திக்குத்து : கடற்படை வீரர் ஒருவர் உயிரிழப்பு

-திருகோணமலை நிருபர்-

திருகோணமலை கடற்படை முகாமுக்குள் கடற்படை வீரரொருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது.

இச்சம்பவம் இன்று புதன்கிழமை அதிகாலை 2.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நாவிக நெவி பண்டார என்ற பெயர் வழங்கப்பட்டுள்ள நிலையில் மற்றைய விபரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை என வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் துறைமுக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்