
உயிரிழந்த மாணவியின் பெற்றோரை பிரதமர் சந்தித்தார்
கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் உயிரிழந்த இளம் மாணவியின் பொற்றோர் மற்றும் பெற்றோரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிசாருடன், இன்று சனிக்கிழமை மாலை பிரதமர் அலுவலகத்தில் வைத்து பிரதமர் விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டதாக பிரதமர் அலுவலகம் வெளயிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ, பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சர் சரோஜா பால்ராஜ் மற்றும் பல அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தின் போது, பாடகாலை மற்றும் தனியார் கல்வி வகுப்பில் நடந்ததாகக் கூறப்படும் சம்பவங்கள், மாணவியின் மரணத்திற்குக் காரணமாக இருந்ததாகக் கருதப்படும் சம்பவங்கள் குறித்து விரைவான, நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை மேற்கொள்ளுமாறு பொலிசாருக்கு அறிவுறுத்தப்பட்டது.
சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்ட தருணத்திலிருந்து பொருத்தமான நடைமுறைகள் திறம்பட பின்பற்றப்பட்டதா என்பதை மதிப்பிடுவதற்காக கல்வி அமைச்சகம் தற்போது ஒரு உள்ளக விசாரணையை நடத்தி வருகின்றது.