விமான நிலையத்தின் களஞ்சியசாலையில் சிக்கிய போதைப்பொருள்
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஐஸ் மற்றும் குஷ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன்போது கைப்பற்றப்பட்ட 7 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள், 1.1 கிலோ குஷ் போதைப்பொருள் கையிருப்பின் பெறுமதி 8 கோடி ரூபாவிற்கும் அதிகம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்ட குறித்த போதைப்பொருட்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள களஞ்சியசாலையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.