விபத்தில் கணவன் மரணம்: மனைவி கைது

கேகாலை பகுதியில் விபத்தொன்றில் கணவன் படுகாயமடைந்து பலியானதையடுத்து, அவரது மனைவியும், அவரது சட்ட விரோத கணவனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாவனெல்ல எலயபொல வீதிப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை காரொன்று மோதியதில் படுகாயமடைந்த ஒருவர், மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார்.

விபத்து தொடர்பான விசாரணையின் போது இது இறந்தவரின் மனைவி மற்றும் அவரது சட்டவிரோத கணவன் இணைந்து செய்த கொலை எனத் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்தே உயிரிழந்தவரின் மனைவியும், மனைவியின் முறைக்கேடான கணவனும் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்