
கடுவெல-கொள்ளுப்பிட்டி பிரதான வீதியில், மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் நபர் ஒருவர், ஆயுதம் போன்ற பொருளைப் பயன்படுத்தி பல வாகனங்களைத் தாக்குவதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
இந்தச் சம்பவம், நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெலிக்கடை பொலிஸ் நிலைய அதிகாரிகள், சந்தேக நபரைத் துரத்திச் சென்று சிறிது நேரத்திலேயே அவரைக் கைது செய்ததாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்
இந்தச் சம்பவத்தின் போது, நான்கு வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும், கைது செய்யப்பட்ட ராகமையை சேர்ந்த 29 வயதான சந்தேக நபர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
